தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் கூட்டமைப்பு ஈடுப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக கூட்டமைப்பினுள் புதிய கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்படும் என்று கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில், அதற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதன்போது புதிய கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக கூட்டமைப்பினுள் புதிய கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்படும் என்று கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில், அதற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதன்போது புதிய கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories