மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சென்ற ஜனாதிபதி

Tuesday, 13 November 2018 - 17:09

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு விஜயம் செய்தார்.

இதன்போது, அவர் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உள்ளக மற்றும் நிதி பிரிவின் செயற்பாடுகளை கண்காணித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நிலவும் அரசியல் நிலைமைகளை இடையூறாக கருதாது எதிர்பார்த்த வருடாந்தர இலக்கை அடைவதற்காக திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்பின்னர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன காணி அமைச்சிற்கு விஜயம் செய்தார்.

இதன்போது அவர் அதன் செயற்பாடுகளை ஆராய்ந்துள்ளார்.

காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு காணி வழங்கும் அனுமதி பத்திரத்தை வழங்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த செயற்பாடு உரிய மற்றும் விரைவாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips