உயர்நீதிமன்றம் செல்வது தொடர்பில் மகிந்த தேசப்பிரிய கருத்து

Tuesday, 13 November 2018 - 20:11

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் உயர்நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தடை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரத்னஜீவ ஹுல் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரே கருத்திற்கு அமைய செயற்பட வேண்டுமாயின், மூன்று பேர்கொண்ட ஆணைக்குழுவை அமைப்பதில் பயனில்லை.

எனவே, தமது விருப்பத்திற்கு அமைய உறுப்பினர் ஒருவர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த நிலையில், தாம் தனிப்பட்ட முறையில் ஏனையோர்களின் கருத்துக்களுக்கு தடையாக இருப்பதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips