சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற 5 பேர் கைது

Wednesday, 14 November 2018 - 16:32

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
போதைப்பொருள் குற்றத்திற்காக பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்க்கச் சென்ற மகன் உள்ளிட்ட 5 பேர் கைது காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் சிறையில் உள்ள குறித்த நபருக்கு ஹெரோயின் மற்றும் சிம் அட்டையொன்றை சவர்க்காரம் மற்றும் பற்பசை பொதிகளில் மறைத்து கொடுக்க முற்பட்ட போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பதுளை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முதலில் சிறைச்சாலைக்கு முன்னால் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றைய சந்தேநபர்கள் மூவரும் பதுளை - வினீதகம பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

21 தொடக்கம் 24 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips