விசாரணை நடவடிக்கைகள் வெலிக்கடை காவல்துறையினரிடம்

Friday, 16 November 2018 - 13:32

+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதலின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கத்திகளை கொண்டுசென்றமை தொடர்பிலான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் வெலிக்கடை காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற காவல்துறை பிரிவின் உயர் அதிகாரியொருவர் இதனை தெரிவித்தார்.
 

இந்த நிலையில், மேலதிக விசாரணைகளை வெலிக்கடை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதலின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கத்தியொன்றை கொண்டு தம்மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவும் நாடாளுமன்றத்தினுள் கத்தியொன்றை கொண்டுவந்ததாக இந்திக்க அநுருத்த முறைப்பாடு செய்துள்ளார்.
 
இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவிற்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் கலாநிதி விமல் கீகனகே முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

இந்த மோதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்ட்டன் பெர்னான்டோவின் சார்பில் காவல்துறை தலைமையகத்தின் காவல்துறை நிவாரண பிரிவில் முறைப்பாடொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips