பொது மக்களுக்கான ஓர் அவசர எச்சரிக்கை..!!

Sunday, 18 November 2018 - 12:44

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21%21
சிறார்கள் மத்தியில் விசேடமான வைரஸ் நோய் ஒன்று பரவிவருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
 
இந்த வைரஸ் இன்புளுவன்சா ஏ மற்றும் பி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
 
சிறார் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.
 
குறித்த நோய் தொடர்பான அறிகுறிகளைக் கொண்ட சிறார்களை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவர்களை ஓய்வாக இருக்கும் படியும் வேண்டியுள்ளனர்.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips