தம்புள்ளையில் காவற்துறை அதிகாரிகள் மீது மிளகாய் தூள் தாக்குதல்

Monday, 19 November 2018 - 18:59

%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
தம்புள்ளை - இனாமலுவ பிரதேசத்தின் விற்பனை நிலையமொன்றில் நடாத்திச்செல்லப்பட்ட பாரிய போதைப்பொருள் வர்த்தகமொன்றை  சுற்றிவளைத்த காவற்துறை அதிகாரிகள் மீது இன்று மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவின் 5 அதிகாரிகள் மீது இவ்வாறு மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த விற்பனை நிலையத்தை நடாத்தி சென்ற வர்த்தகர் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டு காவற்துறை அதிகாரிகளை தாக்கி மகிழூர்தியில் தப்பிச் சென்றுள்ளார்.

மிளகாய் தூள் தாக்குதலுக்கு உள்ளான குறித்த 5 அதிகாரிகளும் தற்போதைய நிலையில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips