கலைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் மேற்கொண்டத் தீர்மானம் பிழையானது என்று தெரிவித்து, உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் ஊடாக தமது, நாட்டு மக்களதும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, குறித்த மனுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த மனுவில் சபாநாயகர், நாடாளுமன்ற பொதுசெயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடாளுமன்றத்தை கூட்டியிருப்பது சட்டவிரோதமானது என்று அவர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் ஊடாக தமது, நாட்டு மக்களதும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, குறித்த மனுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த மனுவில் சபாநாயகர், நாடாளுமன்ற பொதுசெயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடாளுமன்றத்தை கூட்டியிருப்பது சட்டவிரோதமானது என்று அவர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Follow US
Most Viewed Stories