நடப்பு அரசியல் நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்தராபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அடுத்தக்கட்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் தீர்ப்புகளை அடுத்து எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories