மனுஷ நாணயக்கார மீது குற்றச்சாட்டு

Sunday, 09 December 2018 - 19:40

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவின் ஆதரவாளர்கள் என கூறப்படும் சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பத்தேகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் சுமார் 6 லட்சம் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் கயான் சதரசிங்கவின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அரசியல் நோக்கம் கொண்டு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கயான் சதரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலி - போத்தல சந்தியில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் மனுஸ நாணயக்காரவை தொடர்பு கொண்டு வினவ முற்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips