கிளிநொச்சி - இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என்.டிலக்சன் என்ற இளைஞனே நேற்று இவ்வாறு பலியாகியுள்ளார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் இரணைமடுவின் வான்கதவு நான்கு திறக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதிக்குள் பெருமளவான பொது மக்கள் குழுமியிருந்தனர்.
இதில் சில இளைஞர்கள் அதில் ஆழமான பகுதிக்குள் இறங்கி நீராடி கொண்டிருந்தனர்.
இதன் போது யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியிலிருந்து ஐந்து பேருடன் இரணைமடு நீர்த்தேக்கத்தை பார்வையிட வந்திருந்த இளைஞர் ஒருவர் அதில் நீராட முற்பட்ட வேளை நீரில் மூழ்கினார்.
பின்னர் மேற்கொண்ட தேடுதலில், ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதேவேளை, இரணைமடு நீர்த்தேக்கத்தினை பார்வையிட சென்றிருந்த சிறுமியொருவரும் நீருக்குள் தவறி விழுந்துள்ளார்.
எனினும் அதனை அவதானித்த நபரொருவர் சிறுமியை காப்பாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இரணைமடு நீர்த்தேக்கம் அபிவிருத்திக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என்.டிலக்சன் என்ற இளைஞனே நேற்று இவ்வாறு பலியாகியுள்ளார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் இரணைமடுவின் வான்கதவு நான்கு திறக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதிக்குள் பெருமளவான பொது மக்கள் குழுமியிருந்தனர்.
இதில் சில இளைஞர்கள் அதில் ஆழமான பகுதிக்குள் இறங்கி நீராடி கொண்டிருந்தனர்.
இதன் போது யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியிலிருந்து ஐந்து பேருடன் இரணைமடு நீர்த்தேக்கத்தை பார்வையிட வந்திருந்த இளைஞர் ஒருவர் அதில் நீராட முற்பட்ட வேளை நீரில் மூழ்கினார்.
பின்னர் மேற்கொண்ட தேடுதலில், ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதேவேளை, இரணைமடு நீர்த்தேக்கத்தினை பார்வையிட சென்றிருந்த சிறுமியொருவரும் நீருக்குள் தவறி விழுந்துள்ளார்.
எனினும் அதனை அவதானித்த நபரொருவர் சிறுமியை காப்பாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இரணைமடு நீர்த்தேக்கம் அபிவிருத்திக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Follow US
Most Viewed Stories