கோபத்தில் இருந்த மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த கணவர்..! பின்னர் நடந்த விபரீதம்!!

Tuesday, 11 December 2018 - 12:30

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D..%21+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21%21
தமிழகம் - திருப்பூரில் உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை அவரது கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அண்ணா நகரை சேர்ந்த இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மூர்த்தி நாளாந்தம் பணி முடித்து விட்டு வீடு வரும் போது மது அருந்திவரும் பழக்கத்தை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதனால் , கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த கணவர், மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

ஏற்கனவே கணவர் மீது கடும் கோபத்தில் இருந்த குறித்த பெண், இதற்கு மறுத்துவிட்டார்.

இதனால் கடும் கோபமடைந்த அவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் கொலை செய்யப்பட்ட மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த சந்தேகநபரான கணவரை காவற்துறையினர் கைது செய்து விசாரித்து வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips