இலங்கை நாடாளுமன்றம், உலக நாடாளுமன்றங்களின், முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற முறுகல் நிலைகள் தொடர்பில் அவர் இதன்போது தமது கவலையையும் வெளிப்படுத்தினார்.
இதேவேளை, நாடாளுமன்ற அமர்வு நாளை இடம்பெறவுள்ள நிலையில், பொது மக்கள் கூடம் மற்றும் விருந்தினர் பார்வைக்கூடம் என்பனவற்றை திறக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே நாளைய தினம் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார் என, நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி விசேட காவற்துறை பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்ற போதும், குறித்த பார்வைக் கூடங்கள் முடிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற முறுகல் நிலைகள் தொடர்பில் அவர் இதன்போது தமது கவலையையும் வெளிப்படுத்தினார்.
இதேவேளை, நாடாளுமன்ற அமர்வு நாளை இடம்பெறவுள்ள நிலையில், பொது மக்கள் கூடம் மற்றும் விருந்தினர் பார்வைக்கூடம் என்பனவற்றை திறக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே நாளைய தினம் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார் என, நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி விசேட காவற்துறை பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்ற போதும், குறித்த பார்வைக் கூடங்கள் முடிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories