போலியான ஆவணங்களை தயாரித்து வந்த அச்சகம் முற்றுகை

Wednesday, 12 December 2018 - 10:12

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88
போலியான அனுமதிபத்திரம் மற்றும் சான்றிதழ்களை அச்சிடும் நிலையமொன்றை நடாத்திச் சென்ற நபரொருவர் கல்னேவ - கலங்குட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அச்சகத்தில் இருந்து போலியாக தயாரிக்கப்பட்டிருந்த 42 சாரதி அனுமதி பத்திரங்களும் மற்றும் வாகன வருமான அனுமதிப் பத்திரங்கள் 8ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் , சான்றிதழ்களும் மற்றும் கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு பட்டியலொன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மேலும் , குறித்த ஆவணங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணணி உள்ளிட்ட சில உபகரணங்களும் காவற்துறை பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips