பணிப்புறக்கணிப்பால் இழந்த வருமானத்தை சந்தாப்பணத்தால் ஈடுசெய்யுமாறு தொழிலாளர்கள் வலியுறுத்தல்

Thursday, 13 December 2018 - 13:46

%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
பதுளை - தம்பேதன்னை தோட்டத்தில் ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், எதிர்ப்பு போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.

தம்பேதன்னை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பு காலத்தில் இழந்த வருமானத் தொகையை சந்தாப்பணத்தின் ஊடாக ஈடுசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியும், இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனத்தினரும் பேச்சுவார்த்தைக்கு இணங்கிருப்பது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதன் உப தலைவர் எஸ். அருள்சாமி இதனைத் தெரிவித்துள்ளார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips