வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டங்களப்பு மாவட்டங்களிலும் சில சந்தர்ப்பங்களில் காற்றானது 60 தொடக்கம் 65 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்த திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கிழக்கு கடல் பிரதேசங்களில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றராக அதிகரித்து வீசுவதுடன், அது சில சந்தர்ப்பங்களில் மணிக்கு 90 கிலோமீற்றராக அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் புயலாக வலுபெறுவதுடன், எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் அது மேலும் வலுவடைய கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேபோல், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்த திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கிழக்கு கடல் பிரதேசங்களில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றராக அதிகரித்து வீசுவதுடன், அது சில சந்தர்ப்பங்களில் மணிக்கு 90 கிலோமீற்றராக அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் புயலாக வலுபெறுவதுடன், எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் அது மேலும் வலுவடைய கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Follow US
Most Viewed Stories