ஜம்மு - காஷ்மீரில் 7 பொதுமக்கள் பலி

Saturday, 15 December 2018 - 19:23

%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+7+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
இந்தியாவின், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 7 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக, வெளியான தகவலை அடுத்து இராணுவம் சுற்றி வளைப்பை மேற்கொண்டது.

இதன்போது, அங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 3 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய இராணுவ சிப்பாய் ஒருவரும் இதன்போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips