தனிபட்ட காரணங்களினால், காவற்துறை தலைமையகத்தில் இன்று முன்னிலையாக முடியாது எனவும், நாளைய தினம் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும், புரவெசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான, சமன் ரத்னபிரிய மற்றும் காமினி வியன்கொட ஆகியோர் கோரியுள்ளனர்.
தேசிய பாதுப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், சமன் ரத்னபிரிய வெளியிட்ட கருத்து தொடர்பில், பிவிதுரு எலஉருமய அண்மையில் காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தது.
இந்தநிலையில், மேலதிக விசாரணைக்காக அவர்கள் இன்று காவற்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையிலேயே, அவர்களால் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையும் அவர்கள் காவற்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories