வத்தளை - ஹேகித்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூடு பும்மா எனப்படும் பாதாள உலக குழுவினால் மேற்கொள்ளப்பட்டது என தெரிவயவந்துள்ளது.
குறித்த குழுவுக்கும் குடு செல்லி எனப்படும் பாதாள உலக குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பெற்ற முரண்பாடே இந்த மோதலுக்கு காரணம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று மாலை, மகிழுந்தில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது, பிரிதொரு மகிழுந்தில் சென்றவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 31 மற்றும் 38 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தின் போது துப்பாக்கி சூடும் தாக்குதலுக்கு உட்பட்ட வாகனத்தில் இருந்த பெண்ணொருவருக்கு பாதிப்புகள் எவையும் ஏற்பட்டிருக்க வில்லை.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow US
Most Viewed Stories