அமெரிக்க படையினர் மீது பயங்கர தாக்குதல்

Thursday, 17 January 2019 - 12:35

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் நான்கு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலும் மூன்று அமெரிக்க படையினரும் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு சிரியாவின் மன்பிஜ் நகரில் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிராதிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில், அமெரிக்க படைகளை அங்கிருந்து மீள அழைக்க உள்ளதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டின் பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால், அமெரிக்க படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips