வெலிகம பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து (காணொளி)

Friday, 18 January 2019 - 8:06

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
வெலிகம பிரதேசத்தில் நூல் நிலையமொன்றில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீயினை பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து அணைத்துள்ள நிலையில் , தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.



இதேவேளை , கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் தீடீரென ஏற்பட்டதீ விபத்தினால் அங்குள்ள பழக்கடை ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பத்தின் போது, தீ ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு பரவாது கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கரைச்சிப்பிரதேச சபையின் தீயணைப்புப்பிரிவினரும் மக்களும் ஈடுபட்டனர்.

தீக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை.

இந்தநிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் பகுதியில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

நீர் பம்பி ஒன்றை இயக்க முற்பட்ட வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips