உந்துருளிகளை கொள்ளையிட்டு பாகம் பிரித்து விற்பனை செய்த நால்வர் சிக்கினர் - காணொளி

Friday, 18 January 2019 - 17:53

%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
களுத்துறை மற்றும் பாணந்துறை பகுதிகளில் இடம்பெற்ற உந்துருளி கொள்ளைகளுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் களுத்துறை பகுதிகளில் 4 உந்துருளிகளையும், பாணந்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியொன்றையும் கொள்ளையிட்டு பாகம் பிரித்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சுமார் 5 லட்சம் பெறுமதியான உந்துருளி பாகங்களும் அவர்களிமிமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இந்த மோசடியை நீண்ட காலமாக மேற்கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips