நண்பருடன் படகு சவாரி செய்த நபருக்கு நேர்ந்த கதி - காணொளி

Friday, 18 January 2019 - 18:28

%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
அநுராதபுரம் - நுவர ஏரியில் படகு சவாரி செய்த வேளை படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ள நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு காணால் போயுள்ளவர் பிலியந்தலை பகுதியை சேர்ந்த 48 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று இரவு மேலும் ஒரு நபருடன் நுவர ஏரியில் படகு சவாரியில் ஈடுபட்ட போதே படகு கவிழ்ந்துள்ளது.

இதில் படகு சவாரி செய்த மற்றைய நபர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ள நபரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதுடன் இதுவரை அவரின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.

இன்றைய தினம் தேடுதல் நடவடிக்கையில் கடல் படையின் சுழியோடிகளும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips