விபத்தால் கொதித்தெழுந்த மக்கள்!!

Friday, 18 January 2019 - 20:45

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
கொழும்பு - வோட் பிரதேசத்தில் பேருந்தொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த பெண்ணொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் பின்னர் அங்கிருந்த சிலர் கோபமடைந்து பேருந்தின் சாரதியையும், நடத்துனரையும் தாக்கியுள்ளனர்.

மீகொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து பெரளை – வோட் பிரதேசம் பகுதியில் முச்சக்கரவண்டி மீது மோதியுள்ளது.

குறித்த பேருந்து சமிக்ஞை விளக்குகளை புறக்கணித்து வேகமாக பயணித்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips