இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - பாடசாலை மாணவர் பலி

Monday, 21 January 2019 - 11:09

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
பிலியந்தலை - மஹரகம வீதியின் போகுன்தர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போகுந்தர பகுதியில் இருந்து மஹரகம நோக்கி பயணித்த உந்துருளியொன்று எதிர்திசையில் வந்த உந்துருளியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மற்றைய உந்துருளியில் பயணித்த இருவர் பிலியந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips