வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் தனியார் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 1201 ஏக்கர் காணிகள் இன்று ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவில் இடம்பெற்றது.
இதன்போது, வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.
இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 44.6 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 119.79 ஏக்கர் காணியும், கிளிநொச்சியில் 485 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர மன்னார் மாவட்டத்தில் 504.5 ஏக்கர் காணியும்;, வவுனியாவில் 54.38 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவில் இடம்பெற்றது.
இதன்போது, வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.
இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 44.6 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 119.79 ஏக்கர் காணியும், கிளிநொச்சியில் 485 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர மன்னார் மாவட்டத்தில் 504.5 ஏக்கர் காணியும்;, வவுனியாவில் 54.38 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories