பெற்ற மகளையே வேட்டையாடிய மனித மிருகம்!!

Wednesday, 13 February 2019 - 16:28

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21
தமிழகம் கோவையில் 7 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு வயது 35.

இவரது மனைவி தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக தனது மகளை அரசு மருத்துவமனை அழைத்து வந்துள்ளனர்.

அப்போது ஸ்கேன் செய்து பார்த்ததில் மகள் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனை அறிந்த தாய் அதிர்ச்சி அடைந்தார். பின் மகளிடம் இது பற்றி கேட்ட போது, தந்தை தான் இதற்கு காரணம் என தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், ராமலிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பேரூர் காவல்துறை தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 ஆம் வகுப்பு மாணவியை அவரது தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips