அதிவேகம் ஆபத்தில் முடிந்தது : இருவர் உடல் சிதறி பலி - காணொளி

Tuesday, 19 February 2019 - 9:56

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%3A+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+
நாவலபிட்டி - கம்பளை பிரதான வீதியில் பத்துனுபிட்டிய வரகாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்யொன்றும், டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மோதி இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த மேலும் ஒருவருமே உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் கினிகத்தேனை மற்றும் குருந்துவத்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள நாவலபிட்டி காவல்துறை, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips