இம்ரான் கான் இந்தியாவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Tuesday, 19 February 2019 - 20:28

%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா முயற்சித்தால், அதற்கு பாகிஸ்தான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் புல்வாமா தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், அது தொடர்பாக பாகிஸ்தான் அரச தொலைக்காட்சியில் இம்ரான் கான் முதல்முறையாக இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

காஷ்மீர் பிரச்சினைக்கு இராணுவ தீர்வு என்று எதுவும் இல்லை.

பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் துணை காவல் படை வீரர்கள் 46 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்தத் தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இது புதிய பாகிஸ்தான் என்றும், புதிய சிந்தனையோடும் புதிய மனநிலையுடனும் தாங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips