காணாமல் போயிருந்த குழந்தை தொடர்பில் விசேட விசாரணை

Wednesday, 20 February 2019 - 20:46

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
அக்கரப்பத்தனை - ஹோல்புறூக் - லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயது குழந்தை காணமல்போன நிலையில், மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்கரபத்தனை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காணாமல் போன 2 வயதுடைய குழந்தை 18 மணி நேரங்களின் பின்னர் பிரதேச மக்களினால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதை அடுத்து, தேடுதல் பணியில் காவற்துறையினரும் பிரதேசமக்களும் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பின்னர், குறித்த குழந்தை, இன்று காலை 9.00 மணியளவில் அந்த பகுதியில் உள்ள தேயிலை மலை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தை சிலரால் கடத்தப்பட்டு பின்னர் குறித்த பகுதியில் விடப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிப்பதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் எமது செய்திப் பிரிவு அக்கரபத்தனை காவல்நிலைய பொறுப்பதிகாரியிடம் தொடர்புகொண்டு வினவியது.

இதன்போது, பதிலளித்த அவர், குறிந்த குழந்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், குழந்தைக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என்று காவல்நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் ஏற்பட்டமைக்கான காரணம் குறித்தும் அதனுடன் தொடர்புடையவர்கள் குறித்து கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.












rnrn rnrnrn


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips