கடற்றொழில் அமைச்சு எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Thursday, 21 February 2019 - 7:46

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
கடற்றொழிக்காக அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொண்டு அதன் ஊடாக சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற அனைத்து மீன்பிடி படகு செலுத்துனர்களுக்கும் மீண்டும் படகினை செலுத்த முடியாத வகையில் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு தீர்மானித்துள்ளது.

பல நாள் மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த தடையை அமுல்படுத்துவதற்கு தேவையான சட்டம் மற்றும் விதிமுறைகளை துரிதமாக பிறப்பிப்பதற்கு அவசியமான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, மீன்பிடி படகுகளை பயன்படுத்தி சட்டவிரோத மனித கடத்தல் தொடர்பிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கலந்துரையாடப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips