அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையில் 3வது முறையாக சந்திப்பொன்று இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் இது குறித்த தகவல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் அரசியல் ரீதியில் முரண்பாடுகள் நிலவினாலும், ட்ரம்ப் தனிப்பட்ட ரீதியில், வடகொரிய தலைவருடன் நட்புறவை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் அண்மையில் வியட்நாமில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலில் இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என வடகொரிய தலைவர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.
இதேவேளை, கடந்த வருடம் அவர்களுக்கு இடையில் சிங்கப்பூரில் முதல் கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் இது குறித்த தகவல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் அரசியல் ரீதியில் முரண்பாடுகள் நிலவினாலும், ட்ரம்ப் தனிப்பட்ட ரீதியில், வடகொரிய தலைவருடன் நட்புறவை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் அண்மையில் வியட்நாமில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலில் இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என வடகொரிய தலைவர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.
இதேவேளை, கடந்த வருடம் அவர்களுக்கு இடையில் சிங்கப்பூரில் முதல் கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories