வெனிசுவேலாவில் கடந்த நான்கு நாட்களாக மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரிதும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் எரிபொருட்களை வாங்குவதற்காக பொது மக்கள் வர்த்தக நிலையங்களிற்கு முன்னால் நீள் வரிசையில் காத்திருப்பதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதன் காரணமாக பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கையடக்க தொலைபேசிகள் செயலிழந்துள்ளன.
மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், அரச எரிபொருள் விநியோக நிறுவனத்திற்கு சொந்தமான ஆயிரத்து 800 விநியோக நிலையங்களில் சுமார் நூறு மட்டுமே இயங்குவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow US
Most Viewed Stories