நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின்பிறப்பாக்கி இயந்திரம் தற்போதைய நிலையில் சீர்செய்யப்பட்டிருந்தாலும் , அதனை தேசிய அமைப்புடன் இணைப்பதற்கு மேலும் இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுவரை , சில பிரதேசங்களில் தொடர்ந்தும் மின்சார விநியோகத் தடை ஏற்படக்கூடும் என சக்தி வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் முதல் தற்போதுவரை விட்டு விட்டு மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் , தற்போது மின்பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டுள்ளதால் அதனை தேசிய அமைப்புடன் இணைத்த பின்னர் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் நிலையத்தின் மேலாளர் சந்திரசிறி கால்லகே தெரிவித்தார்.
அதுவரை , சில பிரதேசங்களில் தொடர்ந்தும் மின்சார விநியோகத் தடை ஏற்படக்கூடும் என சக்தி வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் முதல் தற்போதுவரை விட்டு விட்டு மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் , தற்போது மின்பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டுள்ளதால் அதனை தேசிய அமைப்புடன் இணைத்த பின்னர் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் நிலையத்தின் மேலாளர் சந்திரசிறி கால்லகே தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories