51 பாடசாலை மாணவர்களுடன் இத்தாலியில் பேருந்து கடத்தப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
எனினும் காவற்துறையினர் குறித்த மாணவர்களை மீட்டுள்ளனர்.
மாணவர்கள் பலர் பேருந்தினுள் கட்டிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 14 பேர் அதிக புகையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்தின் சாரதியான 47 வயதுடைய சினேகல்வாசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியின் குடிவரவு சட்டம் தொடர்பில் அதிருப்தியில் இருந்த நிலையிலேயே அவர் குறித்த மாணவர்களை பேருந்துடன் எரிக்க முயற்சித்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories