இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத பாரதிய ஜனதா கட்சியுடன் தமிழக அரசாங்கம் ஏன் கூட்டணி அமைத்தது என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் அரூரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
எனினும், இதுவரையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார்களா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்கின்ற முயற்சியில் இந்த ஆட்சி ஈடுபடவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories