தாய்லாந்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இராணுவ ஆதரவு அரசியல் கட்சி, எதிர்பாராத விதமாக முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தலில் இதுவரை 90 சாவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இராணுவ ஆதரவு கட்சியான பலாங்க ப்ரசா ரத் கட்சி, 7.6 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளது.
இந்த வாக்கு எண்ணிக்கையானது குறித்த கட்சியின் எதிர்க்கட்சியான பீயோ தாய் கட்சியைவிட அரை மில்லியனுக்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் கடந்த 1932 ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதன் பின்னர், அங்கு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறாக கடந்த 90 ஆண்டுகளில் 12 முறை ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதையடுத்து, அவரை பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு அரசியல்சாசன நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நிவாட்டம்ராங் பூன்சாங் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்.
எனினும, வலுவான தலைமை இல்லாததால் அந்நாட்டின் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்றுள்ள பொதுத் தேர்தலிலும், தற்போதைய முடிவுகளின் அடிப்படையில் இராணுவ ஆதரவு கட்சி முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தலில் இதுவரை 90 சாவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இராணுவ ஆதரவு கட்சியான பலாங்க ப்ரசா ரத் கட்சி, 7.6 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளது.
இந்த வாக்கு எண்ணிக்கையானது குறித்த கட்சியின் எதிர்க்கட்சியான பீயோ தாய் கட்சியைவிட அரை மில்லியனுக்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் கடந்த 1932 ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதன் பின்னர், அங்கு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறாக கடந்த 90 ஆண்டுகளில் 12 முறை ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதையடுத்து, அவரை பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு அரசியல்சாசன நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நிவாட்டம்ராங் பூன்சாங் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்.
எனினும, வலுவான தலைமை இல்லாததால் அந்நாட்டின் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்றுள்ள பொதுத் தேர்தலிலும், தற்போதைய முடிவுகளின் அடிப்படையில் இராணுவ ஆதரவு கட்சி முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories