முன்னெச்சரிக்கை விடுத்துள்ள இந்தியா!!

Wednesday, 24 April 2019 - 8:31

+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21%21
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்னதாக, அது குறித்து இந்திய புலனாய்வு துறையினர், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் என்.டீ.ரி.வி ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், இலங்கை தரப்பினரை தொடர்பு கொண்ட இந்திய புலனாய்வு பிரிவினர், இந்த விடயத்தை அறியப்படுத்தி இருந்தனர் என இரண்டு நாடுகளின் பாதுகாப்புத் துறை தகவல்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கடந்த சனிக்கிழமை இரவும், இந்தியத் தரப்பினரால், ஒரு முன் எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டிருந்தது என இலங்கை தரப்பு தகவலொன்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏப்ரல் மாதம் 4 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளிலும், குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் இந்திய புலனாய்வு பிரிவினரால், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்தாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த விடயங்கள் தொடர்பில், இலங்கை இந்திய அரச தரப்பில் எவ்வித உத்தியோகபூர்வ பதில்களும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips