சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக குறுகிய கால விடுமுறையில் விடுவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஹெரீப், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரியுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானிய உயர் நீதிமன்றில் நேற்றைய தினம் அவரினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
69 வயதுடைய நவாஷ் ஷெரீப்புக்கு, மோசடி குற்றம் தொடர்பில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி, நவாஷ் ஷெரீப்புக்கு 6 வாரங்களுக்கு குறுகியகால விடுமுறை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நவாஷ் ஷெரீப் பிரித்தானியாவில் வழமையாக சிகிச்சைபெறும் மருத்துவரிடம் சிகிச்சைப் பெறவேண்டும் என பாகிஸ்தானில் உள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி நவாஷ் ஷெரீப்பினால் பாகிஸ்தான் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தானிய உயர் நீதிமன்றில் நேற்றைய தினம் அவரினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
69 வயதுடைய நவாஷ் ஷெரீப்புக்கு, மோசடி குற்றம் தொடர்பில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி, நவாஷ் ஷெரீப்புக்கு 6 வாரங்களுக்கு குறுகியகால விடுமுறை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நவாஷ் ஷெரீப் பிரித்தானியாவில் வழமையாக சிகிச்சைபெறும் மருத்துவரிடம் சிகிச்சைப் பெறவேண்டும் என பாகிஸ்தானில் உள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி நவாஷ் ஷெரீப்பினால் பாகிஸ்தான் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories