கடல் நீர் மட்டம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Tuesday, 21 May 2019 - 15:03

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
கடல் நீர் மட்ட உயர்வு வேகம் குறித்து விஞ்ஞானிகள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

2100ம் ஆண்டாகும் போது உலகின் கடல்நீர் மட்டம் 1 மீற்றர் என்ற அளவில் உயர்ந்திருக்கும் என்று முன்னதாக கணிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இது எதிர்பார்த்ததை விட அதிகமான வேகத்தில் உயர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது க்ரீன்லாந்து மற்றும் அன்டார்டிக்கா ஆகிய கண்டங்களின் பனிப்பாறைகள் வேகமாக கரைகின்றன.

இதனால் 2100ம் ஆண்டாகும் போது கடல் நீர் மட்டம் 2 மீற்றர் அளவில் உயர்வடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அதிக எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர நேரும் என்றும், பல சிறிய தீவுகள் அழிவடையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips