பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள தெரேசா மே!

Wednesday, 22 May 2019 - 21:03

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%87%21
புதிய ப்ரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் தெரேசா மே விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தது.

அடுத்த மாதம் முதற்பகுதியில் குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

எனினும் ஆளுங்கட்சியிலேயே இதற்கு எதிர்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பல்வேறு விட்டுக்கொடுப்புகளுடனான பரிந்துரைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரேசா மே விளக்கமளிக்கவுள்ளார்.

ஏற்கனவே ப்ரெக்சிட் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே முன்வைத்த 3 உடன்படிக்கைகள் நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் எதிர்கட்சியான தொழிற்கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் தெரேசா மே பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips