இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பயிற்சி வகுப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர்.
அவர்களுள் பெரும்பாலானோர் மாணவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற பகுதியில் உள்ள வணிக வளாகம் அமைந்துள்ள கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் நேற்று மாலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
அதில் 14 முதல் 17 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களே பலியாகினர்.
அத்துடன், சுமார் 20 பேர் காயமடைந்த நிலையில், குஜராத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் தளத்தின் ஊடாக அனுதாபம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories