புல்வாமா தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் இன்று இந்திய படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும், இடையே பரஸ்பர துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளும் கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி இடம்பெற்ற புல்வாமா தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
புல்வாமாவில் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி இந்திய படைவீரர்கள் பயணித்த வாகனத்தின்மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
Follow US
Most Viewed Stories