போரிஸ் ஜோன்சன் பிரதமராகும் வாய்ப்பு

Wednesday, 19 June 2019 - 8:37

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜோன்சன், அந்த நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 
இந்தபோட்டியில் பங்கேற்றிருந்த 7 பேர் தொடர்பான இரண்டாவது கட்ட வாக்கெடுப்பு நேற்று நிறைவடைந்தது. 
 
அதில் சுமார் 40 சதவீதமான வாக்குகளை போரிஸ் ஜோன்சன் கைப்பற்றி இருந்தார். 
 
மேலும் நான்கு வேட்பாளர்கள் 33க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், தற்போது பிரதமர் பதவிக்கான போட்டியில் ஐந்து பேர் எஞ்சியுள்ளனர்.
 
அவர்களுக்காக நடத்தப்படும் வாக்கெடுப்பில் இறுதியாக 2 பேர் தெரிவு செய்யப்பட்டு, எதிர்வரும் 22ம் திகதி முதல் கன்சர்வேட்டிவ் கட்சியின் பேராளர்கள் மத்தியில் அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரதமர் தெரிவு செய்யப்படுவார். 
 
ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரையில் ப்ரெக்சிட் அமுலாக்க காலம் நீடிக்கப்பட்டிருந்தது.
 
இந்த கால எல்லைக்குள் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக முடியும் என்பதில் போரிஸ் ஜோன்சன் உறுதியாக உள்ளார். 
 
ப்ரெக்ஸிட் விடயத்தில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணங்கச் செய்ய முடியாது போனதாலேயே தெரேசா மே பதவி விலக நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips