ஆளும் அரசாங்கம், சர்வதேச நாடுகளிலிருந்து பெற்றிருந்த கடன் தொகையில் 70 சதவீத கடன் மீள செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 5.4 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை செலுத்தியுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை மீள செலுத்துவதற்கு போதுமான நிதியை தம்மால் திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
அதேநேரம் எதிர்காலத்தில் எஞ்சிய தொகையினை மீள செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிடம் தற்போது 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணயம் கையிருப்பில் உள்ளது.
இந்த தொகையானது நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளதாகவும், பெருந்தொகையான கடன் மீள செலுத்தப்பட்டிருப்பதால் பெறப்பட்ட கடன் தொகைக்கான வட்டி வீதமும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 5.4 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை செலுத்தியுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை மீள செலுத்துவதற்கு போதுமான நிதியை தம்மால் திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
அதேநேரம் எதிர்காலத்தில் எஞ்சிய தொகையினை மீள செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிடம் தற்போது 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணயம் கையிருப்பில் உள்ளது.
இந்த தொகையானது நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளதாகவும், பெருந்தொகையான கடன் மீள செலுத்தப்பட்டிருப்பதால் பெறப்பட்ட கடன் தொகைக்கான வட்டி வீதமும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Follow US
Most Viewed Stories