முச்சக்கரவண்டி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து... கணவன், மனைவி பலி

Saturday, 17 August 2019 - 17:45

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
நுவரெலியா ராகலை பிரதான வீதியின் கந்தப்பளை - ஐஸ் பீலி என்றழைக்கப்படும் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகினர்.

சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் நுவரெலியா மாவட்ட மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரக்கறிகளை ஏற்றிய பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவர்கள் மந்தாரநுவர - எலமுல்ல - கொடிகமுவ பகுதியை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips