வவுனியா-மரத்தடி- காஞ்சனாமோட்டை பகுதியில் ஒரு இளம் பெண்ணை கடத்த முற்பட்ட 11 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த 11 சந்தேக நபர்களும், அப்பெண்ணை பலாத்காரமாக வெளியில் இழுத்து வந்து சிற்றூர்தி ஒன்றினூடாக கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது சம்பவத்தை அறிந்த பிரதேச மக்களும், காவல்துறையினரும் குறித்த வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.
கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட சிற்றூர்தியுடன் முச்சக்கரவண்டி ஒன்றும் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த இளம் பெண்ணின் வீட்டு நிர்மாண பணிகளுக்காக வந்தவர்களே, இவ்வாறு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த 11 சந்தேக நபர்களும், அப்பெண்ணை பலாத்காரமாக வெளியில் இழுத்து வந்து சிற்றூர்தி ஒன்றினூடாக கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது சம்பவத்தை அறிந்த பிரதேச மக்களும், காவல்துறையினரும் குறித்த வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.
கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட சிற்றூர்தியுடன் முச்சக்கரவண்டி ஒன்றும் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த இளம் பெண்ணின் வீட்டு நிர்மாண பணிகளுக்காக வந்தவர்களே, இவ்வாறு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories