யாழ் வந்த ஜேர்மனி குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Wednesday, 21 August 2019 - 11:16

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF..%21
கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ் நல்லூரை பிறப்பிடமா கொண்ட, தற்போது ஜேர்மனியில் குடும்பத்துடன் வசித்து வந்த சத்தியா செல்வரஞ்சன் என்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஜூலை 29 ஆம் திகதி அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குறித்த பெண்ணின் மகனான 11 வயதான ஸ்மிநாத் செல்வரஞ்சன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள நிலையில், குறித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே பெண் உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனியிலிருந்து குடும்பமாக யாழ்ப்பாணம் செல்வதற்காக வந்திருந்த வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips