இளைஞர் ஒருவரின் வாழ்வில் இறுதி நிமிடத்தில் எடுக்கப்பட்டுள்ள காணொளியொன்று தற்சமயம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்கா - புளோரிடா மாநிலத்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீராடும் போது சுய காணொளி எடுத்த வேளை, குறித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், அவர் சுய காணொளி எடுத்த கெமராவை நீர்மூழ்கும் இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார்.
நீர்வீழ்ச்சிக்கு அருகில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரிச்சட் என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அவர் வைத்திருந்த கெமராவை இரண்டு வருடங்களுக்கு பின்னர் அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீர்மூழ்கும் இளைஞரான ரிச் அலோஹா மீட்டுள்ளார்.
பின்னர் இந்த கெமராவை பரிசோதித்த போது அதில் ரிச்சட் என்ற இளைஞர் சுய காணொளி எடுக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியிருந்தது.
பின்னர் அந்த கெமராவை மீட்ட இளைஞர், அதனை உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா - புளோரிடா மாநிலத்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீராடும் போது சுய காணொளி எடுத்த வேளை, குறித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், அவர் சுய காணொளி எடுத்த கெமராவை நீர்மூழ்கும் இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார்.
நீர்வீழ்ச்சிக்கு அருகில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரிச்சட் என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அவர் வைத்திருந்த கெமராவை இரண்டு வருடங்களுக்கு பின்னர் அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீர்மூழ்கும் இளைஞரான ரிச் அலோஹா மீட்டுள்ளார்.
பின்னர் இந்த கெமராவை பரிசோதித்த போது அதில் ரிச்சட் என்ற இளைஞர் சுய காணொளி எடுக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியிருந்தது.
பின்னர் அந்த கெமராவை மீட்ட இளைஞர், அதனை உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories