மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்பிய நளினி முருகன்

Monday, 16 September 2019 - 7:29

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருகின்ற நளினி முருகனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறை விடுமுறைக் காலம் நேற்றும் நிறைவடைந்தது.

25 வருடங்களுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்ற அவர், தமது மகளின் திருமண ஏற்பாட்டுக்காக சிறை விடுமுறையை பெற்றிருந்தார்.

ஜுலை மாதம் 25ம் திகதி வழங்கப்பட்ட சிறை விடுமுறை, பின்னர் விண்ணப்பத்தின் அடிப்படையில் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

எனினும் திருமண ஏற்பாடுகள் பூர்த்தியாகாத நிலையில், அவர் மேலும் காலநீடிப்பு கோரி இருந்த போதும், அந்த விண்ணப்பத்தை சென்னை மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்தநிலையில் நேற்று அவர் வேலூர் சிறைக்கு திரும்பியதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips